24 மணி நேரம் - 346 சாவுகள் - மீண்டும் உச்சத்தை நோக்கி அதிகரிக்கும் தொற்று!!
மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன. சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 20.489 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 11.395 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 346 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். .
ஒரு வாரததிற்குள் முதியோர் இல்லங்களில் மட்டும் 522 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர்.
நாளிற்கு நாள் இது அதிகரித்தது. 24.904 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 1.737 அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2.625 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது. கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 244 தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments