Header Ads

பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

 


உலக அளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 54ஆயிரத்து 940பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 563பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 30இலட்சத்து 72ஆயிரத்து 349பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 81ஆயிரத்து 431பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 83ஆயிரத்து 951பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மூவாயிரத்து 98பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து ஆறாயிரத்து 967பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.