Header Ads

குழுமோதல் படுகொலை - ஒரு வருடத்தின் பின்னர் சிறுவன் கைது!!

 


2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வல்-து-மார்ன் (Val-de-Marne) இன்  Limeil-Brévannes இளைஞர்கள்  மற்றும் செய்ன்-எ-மார்ன் (Seine-et-Marne) இன் Brie-Compte-Robert இளைஞர்களிற்கிடையே பெரும் குழு மோதல் நடந்தது.

 

 
இதில் Brie-Compte-Robert இனைச் சேர்ந்த, 20 வயதுடைய இளைஞன் கத்திக் குத்திற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்டான்.
 
இந்த விசாரணையில், ஏற்கனவே,  கொலை நடந்த சமயத்தில்  14 மற்றும் 17 வயதுடைய  இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டும், கத்தியால் குத்தியது யார் என்று உறுதிப்படுத்தப்படாமையால் விடுதலை செய்யப்பட்டனர்.
 
ஆனால் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கத்தியால் குத்திய கொலையாளி என 16 வயதுடைய பதின்ம வயதினன் கைது செய்யப்பட்டுள்ளான்.
 
Brie-Comte-Robert (Seine-et-Marne) இலுள்ள பெற்றோர்களின் வீட்டில் வைத்து இவன், Melun காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
 
உடனடியாக நீதிபதியின் முன்னால்,  காவற்துறையினர் இவனைச் சமர்ப்பித்துள்ளனர். கடுமையான சட்டக் கண்காணிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள இவன் தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகளிற்கு உட்படுத்தப்பட உள்ளான்.

No comments

Powered by Blogger.