Header Ads

முதல் தடவையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்த நாடு

 


தென்கொரியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் முதல் தடவையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.

இது ஏற்கனவே உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாட்டில் புதிய எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு 275,800 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன, இது 2019 ஆம் ஆண்டை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.

சுமார் 307,764 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறைந்து வரும் சனத்தொகை ஒரு நாட்டிற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சுகாதார அமைப்புகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது பொதுச் செலவினங்களில் அதிகரித்த அழுத்தம் தவிர, குறைந்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.

அவை பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த மாதம், ஜனாதிபதி மூன் ஜே-இன் குறைந்த பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் குடும்பங்களுக்கு பண ஊக்கத்தொகை உள்ளிட்ட பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் கீழ், 2022 முதல், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் செலவுகளை ஈடுசெய்ய 2 மில்லியன் (8 1,850; £ 1,350) ரொக்கப் பணம் வழங்கப்படும்.

ஊக்கத்தொகை 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் 500,000 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.