Header Ads

இந்தோனேசியாவில் பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்!

 


இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து 50 பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் புறப்பட்டு சென்றது.

கடல் பரப்புக்கு மேல் பறந்து செல்லும்போது 10,000 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த The Sriwijaya Air விமானம், ஜகார்தாவிலிருந்து Pontianak என்ற இடம் நோக்கி புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட மூன்றரை நிமிடங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் கடலில் விழுந்துள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த தகவலை, இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகமும் உறுதிசெய்துள்ளது.

No comments

Powered by Blogger.