Header Ads

இரு மகள்களை துன்புறுத்தி கொன்ற பெற்றோர்! விசாரணையில் வெளிவந்த காரணம்…

 


இந்தியாவில் ஆந்திராவில் பெற்ற மகள்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மதனபள்ளி பகுதியை சேர்ந்த தந்தை கல்லூரி முதல்வர்.

தாய் உதவி பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் அதிசயம் நடக்கும் எனக்கூறி தங்களது மகள்களை அடித்து துன்புறுத்தியதுடன் நரபலி கொடுத்துள்ளனர்.

மேலும் விரைவில் தங்கள் மகள்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை விசாரணை நடத்திய பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.