Header Ads

கனடாவில் தம்பதிகள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்!

 


கனடாவில் கொரோனா தொற்று காரணமாக அரசு முடக்கநிலையை அமுல்படுத்தியது.

இந்நிலையில் சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட நிலையில், விவாகரத்து குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆலோசனைகள் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் விவாகரத்து பெறும் நபர்கள் இன்னும் அதிகரிக்கவில்லை.

மக்கள் தங்கள் விருப்பங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்கள் கொரோனாவுடன் மிகவும் மன அழுத்த சூழ்நிலையில் இருந்தார்கள் என கூறப்படுகின்றது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில், மக்கள் ஒன்றாக இணைக்கப்படும் போது, விவாகரத்து வீதங்கள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.