கொரோனாத் தடுப்பு ஊசி - நாளை கூடும் அவசரப் பாதுகாப்புக் கூட்டம்!!
கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடுவது பிரான்வில் மிகவும் குறைந்த வேகத்திலேயே போடப்பட்டு வருகின்றது. இது பிரான்சில் எதிர்க்கட்சிகளால் மட்டுமல்ல, வெளிநாடுகளில் கூடப் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
மற்றைய நாடுகளில், இலட்சக்கணக்கானவர்களிற்கு தடுப்பு ஊசிகள் போடப்படும் நிலையில், பிரான்சில் 5.000 பேரிற்குத் தடுப்பு ஊசி போடுவதே சாதனையாக இருக்கும் நிலையில், இதற்கான மாற்றுத் திட்டத்தினை வகுக்க வேண்டிய நிலையில் பிரெஞ்சு அரசாங்கம் உள்ளது.
இதற்காக, நாளை புதன்கிழமை, ஜனாதிபதி மக்ரோன் மிகவும் அரவசரமாக, பாதுகாப்புச் சபையைக் கூட்ட உள்ளார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
No comments