Header Ads

இணையத்தள விளம்பரங்கள் மூலம் மோசடி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 


இலங்கை மக்களை விளம்பரங்கள் மூலம் மோசடி நடவடிக்கை இடம் பெறுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நாத்தன்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை பண மோசடியில் ஈடுபட்டதாக வெலிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இணையத்தள பக்கங்களில் பல்வேறு விளம்பரங்களை பதிவிட்டுள்ளார்.

பின் அதனை கொள்ளவனவு செய்ய ஆரம்ப கட்டணமாக ஒரு குறித்த தொகையை வைப்பு செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பதிவி செய்யும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொது மக்களின் அடையாள அட்டைகள் திருடப்படுவதாகவும் அதனை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கையில் இடம்பெறுகின்றது.

இதனால் இவ்வாறான விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும், அடையாள அட்டைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விளம்பர மோசடியில் சிக்கி பணம் செலுத்தியவர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குனரின் 071 859 17 53 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.