Header Ads

அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை அடித்து கொன்ற நண்பன்



 துபாயில் அல் பர்சா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று குளியலறைக்கு சென்ற இளம்பெண் அசைவின்றி கிடப்பதாக ஆண் நண்பர் பொலிஸார் தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில், துபாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் ஆண் நண்பரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பெண் திடீரென பேய் பிடித்தது போல் நடந்துகொண்டார் என நண்பன் தெரிவித்துள்ளார்.

இதனால் அவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி பேயை அடித்து ஓட்ட முயற்சித்தேன்.

அப்போது அவர் மயங்கி விழுந்ததால், உடனே பொலிஸார் தகவல் அளித்தேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில், அந்த அறையில் இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு இரத்த காயங்களுடன் கிடந்ததற்கான தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் ஆண் நண்பரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

ஆண் நண்பரும், இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டதால் இளம்பெண்னை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பாக ஏமாற்ற முயன்றுள்ளார்.

மேலும் இளம்பெண்ணை கொலை செய்யும்போது அவர் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.