Header Ads

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த தமிழர்! எதற்கு தெரியுமா….?

 


இந்தியாவில் சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன் (வயது 34) ஐடி ஊழியரான இவருக்கு, பல்வேறு நாடுகளின் கரன்ஸி நோட்டுகளை சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போருக்கு முன்பிருந்தது முதல் தற்போது வரையிலான, 410 நாடுகளில் புழக்கத்தில் இருந்த, கரன்ஸி நோட்டுகளை கடந்த 10 ஆண்டுகளாக அண்ணாமலை சேகரித்து வருகிறார்.

ரூபாய் நோட்டுகள் மற்றும் 50 நாடுகள் வெளியிட்ட 500 நாணயங்களை சேகரித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் .

2012 ஆம் ஆண்டு, லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 29 விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாக, 29 இங்கிலாந்து நாணயங்கள் வெளியிடப்பட்ட நிலையில் அந்த நாணயங்களையும் அண்ணாமலை சேகரித்து வைத்துள்ளார்.

இது ஒரு புதிய சாதனை. இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இவரது சாதனையை அங்கீகரித்து அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதற்கு முன், 2016 ஆம் ஆண்டில், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு வாலிபர், 378 நாடுகளில் உள்ள கரன்ஸி நோட்டுகளைச் சேகரித்து, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் 410 நாடுகள் வெளியிட்ட ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரது சாதனையை அண்ணாமலை தற்போது முறியடித்துள்ளார்.

No comments

Powered by Blogger.