Header Ads

இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பிரான்சிற்குள் வர கடும் நிபந்தனை!!

 


தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரொனாத் தொற்றினால், பிரான்சிற்குள் வருபவர்களிற்கு கடுமையான நிபந்தனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஆரம்பமாகின்றது.

 
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து பிரான்சிற்குள் நுழைவதற்கு முன்னர் கட்டாயமாக 72 மணிநேரத்திற்கு உட்பட்ட PCR கொரோனாப் பரிசோதனையின் எதிர்மறைப் பெறுபேறுகள் (négatif) வைத்திருத்தல் வேண்டும். அத்துடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தலிலும் இருத்தல் வேண்டும்.
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் இருந்து பிரான்சிற்குள் வருபவர்களிற்கும், 72 மணித்தியாலத்திற்குள்ளான கொரோனாப் பெறுபேற்றின் எதிர்மறைப் பெறுபேறுகள் அவசியம்.
 
ஆனால் இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் இருந்து விமானம் மூலமாகவோ, அல்லது கப்பல் மூலமாகவோ பிரான்சிற்குள் நுழைபவர்களிற்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள் எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், தொடருந்து அல்லது வாகனம் மூலம் பிரான்சிற்குள் நுழைபவர்களும் அடிக்கடி சோதனை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
 

No comments

Powered by Blogger.