24 மணி நேரம் - 172 சாவுகள் - 18.436 பேரிற்கு தொற்று
ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்தியசாலைகளில் இருந்து முழுமையான தகவல்களும், ஆய்வுகூடங்களில் இருந்து முழுமையான தொற்றுத் தரவுகளும் கிடைக்காத நிலையிலும்,
கடந்த 24 மணி நேரத்திற்குள் 18.436 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி 3.053.617 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 323 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 73.049 ஆக உயர்ந்துள்ளது. மருத்தவமனைகளில் மட்டும் 51.073 பேர் சாவடைந்துள்ளனர்.
26.393 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன.
2965 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
பிரான்சில் பிரித்தானிய வைரசின் தொற்றுக்கள் அதிகரிப்பது ஆபத்தின் உச்சமாக உள்ளது.
No comments