இந்தோனேசியாவில் பொதுமக்களுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி
இந்தோனேசியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தடுப்பூசி திட்டத்தின் முதல் நபராக ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நேற்று (புதன்கிழமை) தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
தடுப்பூசிகள் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜனாதிபதி ஜோகோ விடோடோ, தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் துறையினர், மருத்துவத் துறை அதிகாரிகள், மதவிவகாரக் சபை செயலர் ஆகியோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இந்தோனேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 043பேர் பாதிக்கப்பட்டதோடு, 24ஆயிரத்து 951பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments