15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞர்கள்
இந்திய பீஹாரின் மதுபானி மாவட்டத்தில் காவாகா பார்கி கிராமத்தை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி, காதுகேளாத வாய்பேச முடியாதவர்.
அந்த சிறுமி தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு அழைத்து சென்றுள்ளார்
அவருடன் வேறுசில சிறுவர்களும் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அவளை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த கொடூரர்கள், சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, சிறுமியின் கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவளுடன் சென்ற சிறுவர்களில் ஒருவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து தகவல் கூறியதாக தெரிகிறது.
உடனே அவளது பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர்.
அவளது பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
அவள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments