Header Ads

மூன்றாவது அடுத்த பொது முடக்கத்துக்கு மக்ரோன் அழைப்பு!



பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத்தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட தீர்மானம்.

அரசாங்க வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஏஎப்பி (AFP)செய்திச் சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது.மேலும் கடந்த ஒரு வாரகாலமாக பொது முடக்கத்திற்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் அரசு குழம்பி வந்தமை குறிப்பிடதக்கது.
அரசியல் கட்சிகளுடனும் தொழிற் சங்கங்களுடனும் நடத்திய கலந்துரை யாடல்களுக்குப் பின்னரே பிரதமர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு மக்களில் அரைவாசிக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையானோர் பொது முடக்கத்தை எதிர்க்கின்றனர் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை நாடாளுமன்றம் ஊடாக நடைமுறைப்படுத்த எண்ணுகின்றது.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் வீரியமான புதிய உருமாற்றங்கள் மிகவேகமாகப் பரவி வருகின்ற நிலையில் நாட்டை முடக்கும் அறிவிப்பை அதிபர் மக்ரோன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது மறுநாள் திங்கட்கிழமை வெளியிடுவார் என்று பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் முன்னைய இரண்டு பொது முடக்கங்களிலும் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட “ஒரு கலப்பு முறை” கொண்டதாக (“hybrid” confinement) இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடெங்கும் தொற்றுக்களது ஆகப்பிந்திய நிலைவரத்தை தரவுகளின் அடிப்படையில் விவாதிப்பதற்காக பாதுகாப்புச் சபையின் கூட்டம் எலிஸே மாளிகையில் சனிக்கிழமை கூட்டப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
பொதுமக்கள் 50% அதிகமானோர் எதிர்க்கும் போது நாடாளுமன்றில் இது தோற்கடிக்கப்பட வாய்ப்பும்அதிகம் உள்ளது.மக்களுக்கு விருப்பமில்லாத பொது முடக்கத்தை மக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு ஒத்து கொள்வார்கள்?

No comments

Powered by Blogger.