Header Ads

ஊரடங்கு நேரத்தை அதிகரிக்கும் மொனாக்கோ!!

 


மொனாக்கோவின் இளவரசர், ஊரடங்கு நேரத்தை அதிகரிப்பதாக இன்று ஊடகங்களிற்குச் செய்தி வழங்கி உள்ளார்.


மொனாக்கொ இராஜ்ஜியத்தில் கொரோனாப் பரவலைத் தடுப்பதற்காக, 11ம் திகிதி திங்கட்கிழமையிலிருந்து 19h00 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.



பிரான்சில் தேசிய ரீதியாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை இங்கு 20h00 மணியிலிருந்தே ஊரடங்கு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதனை 19h00 மணியாக மொனாக்கோ அறிவித்துள்ளது.

பிரெஞ்சு அரசாங்கம், அதியுச்சக் கொரோனாத் தொற்று இருக்கும் மாவட்டங்களில், மாலை 18h00 மணியிலிருந்து ஊரடங்கை அறிவித்துள்ளது. நாளிற்கு நாள் இந்த மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மொனாக்னோ இளவரசர், 19h00 மணியிலிருந்தான ஊரடங்கை இன்று அறிவித்துள்ளார்.

 

No comments

Powered by Blogger.