Header Ads

பிரான்ஸில் போலி கொரோனா தடுப்பு மருந்து விற்பனை! நிபுணர்கள் எச்சரிக்கை

 


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இறுதிகட்ட கட்ட சோதனையில் உள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் என்று மக்களை ஏமாற்றும் வகையில், சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், கொரோனா வைரசுக்கான போலியான மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி மருந்துகள் இணையத்தில் விற்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து விசாரணைகளை சர்வதேச புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 200 யூரோக்கள் முதல் 1,000 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் இதை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.