Header Ads

🔴 6 மணி முதல் ஊரடங்கு! - 93 ஆம் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்..!!

 


இன்று சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது. 

 
நேற்று வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஆரம்பமான இரவு நேர ஊரடங்கு, இன்று முதல் மாலை 6 மணிக்கே ஆரம்பிக்கின்றது. இந்த ஊரடங்கின் போது 93 ஆம் மாவட்டமான  Seine-Saint-Denis இல் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினர் தீவிர வீதி கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். 
 
நேற்றைய ஒரு இரவில் மாத்திரம் 188 பேருக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர். போதிய ஆவணங்கள், அனுமதி பத்திரங்கள் இன்று அவர்கள் வீதிகளில் பயணித்துள்ளனர். அதேவேளை, நேற்று இரவு நான்கு பேர் கைதும் செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.