Header Ads

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம்! 4 பேர் பலி

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் 52பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப்பின் ஆதரவாளர்கள், செனட் சபையின் கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்ததை அடுத்து, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த கலவரத்தில் பொலிஸார் சுட்டதில் ஒரு பெண் இறந்தார்.

இது தவிர, மருத்துவ அவசர நிலை காரணமாக மூன்று பேர் இறந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.