Header Ads

பிரித்தானியாவில் மூடப்பட்ட 4 தடுப்பூசி மையங்கள்!

 


பிரித்தானியாவின் தேசிய வானிலை மையம் நேற்று வேல்ஸ் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் 3cm வரை பனி பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ப்ரெகோன் பீக்கான்கள் மற்றும் ஸ்னோடோனியாவில் 10 முதல் 15cm வரை எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை அப்பகுதியில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான பனிபொழிவு காரணமாக பிரிட்ஜெண்ட், ரோண்ட்டா, அபெர்சினான் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகிய நான்கு சமூக தடுப்பூசி மையங்கள் மூடப்படும் என்று சி.வி.எம் டாஃப் மோர்கன்வ்க் பல்கலைக்கழக சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி பெற உள்ள அப்பாயின்மென்ட் மக்கள் வேறு நாட்களில் தங்கள் தடுப்பூசிகளை பெறுவதற்கு அல்லது இதர சந்தேகங்களுக்கு நியமனக் கடிதங்களில் உள்ள எண்ணை அழைக்குமாறு சுகாதார வாரியம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.