Header Ads

ஸ்பெயின் நாட்டை தாக்கும் பனிப்புயல்! 4 பேர் பலி



ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழி அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் ஸ்பெயினை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது.

பிளோமினா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தலைநகர் மாட்ரிட் மற்றும் ஸ்பெயினின் மத்திய பகுதிகளை புரட்டிப்போட்டது.

இதனால் பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பனி புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடுமையான பனிப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.