Header Ads

செவ்ரோன் : 24 வயது மனைவி கத்திக்குத்தில் பலி! - கணவர் கைது..!!



 செவ்ரோன் நகரில் குடும்ப வன்முறை காரணமாக இளம் மனைவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

 
24 வயதுடைய இளம் மனைவி ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை நண்பகல் 12:25 மணிக்கு செவ்ரோன் நகர காவல்துறையினருக்கு அழைப்பெடுத்த, 28 வயதுடைய நபர் 'தாம் மனைவியை கொலை செய்துவிட்டதாக' தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடத்த அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 
 
பின்னர், ஒரு மணிநேரம் கழித்து Sevran-Beaudottes வணிக வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் வைத்து கொலையாளியான அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். 
 
அவர் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், அவரை உளநல சிகிச்சை நிலையத்தில் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது. 

No comments

Powered by Blogger.