Header Ads

24 மணி நேரம் - 171 சாவுகள் - மீண்டும் உச்சத்தை நோக்கி அதிகரிக்கும் தொற்று!!

 


மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன.  சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.


கடந்த 24 மணி நேரத்திற்குள் 20.177  பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று 19.814   பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்தத் தொற்று  2.767.312 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 171 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர்.  இதனால் மொத்தச் சாவுகள் 67.599 ஆக உயரந்துள்ளது.

வைத்தியசாலைகளில் மட்டும் 46.957 பேர் சாவடைந்துள்ளனர்.

22.440 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது.

No comments

Powered by Blogger.