Header Ads

காதலியின் தந்தையை கொலை செய்த 18 வயது இளைஞன்!!



 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது காதலியின் தந்தையை படுகொலை செய்துள்ளார். 

 
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Annecy (Haute-Savoie) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 11 மணி அளவில் 21 வயதுடைய பெண் ஒருவர் ஜொந்தாமினரை அழைத்துள்ளார். தனது தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தனது தாயார் மிக மோசமாக காயமடைந்துள்ளதாகவும் அப்பெண் தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார். 
 
சம்பவ இடத்துக்கு மூன்று ஜொந்தாமினர் வந்தனர். தகவல் தெரிவித்த பெண்ணின் தந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது தாயார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவத்தில், அங்கு நின்றிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்தனர். அவன் இளம் பெண்ணின் காதலன் எனவும் இந்த வன்முறை சம்பவத்தை அவ் இளைஞனே மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

No comments

Powered by Blogger.