Header Ads

பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த சம்பவம்

 


பிரித்தானியாவில் Bugs Bottom fields, Emmer Green பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 16:00 மணியளவில் 13வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டுள்ளான்.

இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 13 அல்லது 14 வயதுடைய ஐந்து இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவனின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முறையான அடையாளம் காணப்படவில்லை என்றும் தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15:00 மற்றும் 16:30 மணிக்க்கு இடையில் அப்பகுதியில் இருந்த எவரும் சந்தேகத்திற்கிடமான எதையும் கவனித்திருந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீவிரவிசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.