கொரோனா மனிதர்களுக்கு பரவியது குறித்த ஆய்வு..! WHO அறிவிப்பு
கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகளவில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அதனால் சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் வாரம் ஊகானுக்கு ஆய்வு நடத்த செல்லும் முன்னர் இந்த குழுவினர் குவாரன்டைனில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊகானில் எப்படி மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பதே இந்த குழுவினரின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இவ்வாறான பெருந் தொற்றுக்கள் எதிர்காலத்தில் மனிதரிடையே பரவாமல் இருப்பதற்கும் இந்த ஆய்வு வலிவகுக்கும் என நம்பப்படுகின்றது.
No comments