SNCF - இலட்சக்கணக்கான பயணிகள் - பரவுமா தொற்று??
நத்தார் மற்றும் வருட இறுதி விடுமுறைகளிற்கு, இலட்சக்கணக்கான பயணிகள் தொடருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்றும் நாளையும் மட்டுமே, ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் (750.000) பயணிகள், பயணம் செய்ய உள்ளதாக SNCF தெரிவித்துள்ளது.
கொரேனாத் தொற்று தொடர்ந்தும் பிரான்சில் அதிகரித்து வரும், நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் தெரிவித்தபடி, SNCF செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதான தொடருந்து நிலையங்களில் இலட்சக்கணக்கான பயணிகள் கூடும்போதும், தொடருந்துகளில் பயணிக்கும் போதும், அதுவே பெரும் தொற்றிற்கு வழி வகுக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
விமானப் பயணங்களின் போது கேட்கப்படும் கொரோனாப் பரிசோதனைப் பெறுபேறுகள் கூட இங்கு கேட்கப்படாததால் இந்த அச்சம் எழுந்துள்ளது.
No comments