Header Ads

முகக்கவசம் அணிய வற்புறுத்திய காவல்துறையினர் மீது தாக்குதல்!!



முகக்கவசம் அணிய வற்புறுத்தியதால் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை Chanteloup-les-Vignes (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இரு காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது முகக்கவசம் அணியாத இரு நபர்களை பார்த்துவிட்டு, அவர்களை அதிகாரிகள் நெருங்கினார்கள். இருவரையும் முகக்கவசம் அணியும் படி பணித்துள்ளனர்.



 
ஆனால் அவர்கள் முகக்கவசம் அணிவதற்கு பதிலாக இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். வெடிபொருட்களை அதிகாரிகள் மீது வீசியுள்ளனர். இதில் இரு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர். 
 
இரு அதிகாரிகளில் படுகாயமடைந்த ஒருவர்,மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை Chanteloup-les-Vignes நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.