Header Ads

🔴 உடல்நிலையில் முன்னேற்றம்! - ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பும் மக்ரோன்!

 


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் விரைவில் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப உள்ளார். 

 
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இருந்து வெளியேறி  Versailles இல் உள்ள ஜனாதிபதியின் ஓய்வு மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். 
 
இந்நிலையில், இன்று புதன்கிழமை அவரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டதுடன், நாளை வியாழக்கிழமை அவர் ஜனாதிபதி மாளிகைக்கு (எலிசே) திரும்பலாம் என அறிய முடிகிறது. 
 
அதேவேளை, ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த, பிரதமர் Jean Castex  மற்றும் பாராளுமன்ற தலைவர் Richard Ferrand ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.