கொரோனா தொற்றின் மையமாக மாறிய கொழும்பு! வெளியாகிய எச்சரிக்கை
கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்திலிருந்து பயணங்களை மேற்கொள்வதால் கொரோனா தொற்று மற்ற மாகாணங்களுக்கும் பரவக்கூடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி 1 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தை முடக்க வேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
No comments