கனடாவில் முக்கிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவில் குளிர்காலத்தால் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கனடாவில் ரொறன்ரோ உட்பட பல பகுதிகளுக்கு இன்று தொடரும் பனிப்பொழிவால் வாகனச் சாரதிகள் ஆபத்தை உணர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் 15 செ.மீ வரை பனிப்பொழிவு காணப்படுவதால் மக்கள் அனைவரும் அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Toronto, Vaughan, Richmond Hill, Markham, Newmarket மற்றும் Georgina பகுதிகளில் தொடர்ந்தும் பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் பனிக்குக் கீழ் கரும்பனி உருவாக கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments