குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புதிய கொரோனா… எச்சரிக்கும் நிபுணர்கள்
லண்டனில் ஆபத்தானதாக கருதப்படும் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வேகமாக பரவும் புதிய கொரோனா பெருந்தொற்று தொடர்பில் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய தொற்றானது குழந்தைகளை மிக விரைவில் தாக்கக் கூடியது என பிரித்தானிய நிபுணர்கள் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய கொரோனா தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள பிரித்தானிய நிபுணர்கள், இந்த புதிய தொற்று குழந்தைகளை அதிகமாகவும் வேகமாகவும் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், புதிய இந்த கொரோனா தொற்று தொடர்பில் சரியான வழிமுறை இன்னும் தெளிவாக இல்லை.
புதிய இந்த கொரோனா பெருந்தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய இந்த சூழல் கட்டுக்குள் இருப்பதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
No comments