Header Ads

சீனாவில் மர்பநபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல்! ஏழு பேர் பலி



 வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பொது குளியலறைக்கு வெளியே கத்தியுடன் வந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் மெற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

எனினும் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் பெயர் யாங் என்பதும் அவர் உள்ளூரை சேர்ந்தவர். குறித்த தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.