Header Ads

ஜேர்மனி தலைநகரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல்



ஜேர்மனி தலைநகர் பெர்லின் Kreuzberg மாவட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) சனிக்கிழமை காலை அலுவலகங்களுக்கு அருகில் உள்ள Stresemannstraße நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் சம்பவயிடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், ஹெலிகாப்டர் உதவியுடன் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து சம்பவயிடத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் தீவிரவிசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.