Header Ads

அமெரிக்காவில் வெடித்து சிதறிய வாகனத்தால் பரபரப்பு! அவசர நிலை பிரகடனம்

 



அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் உள்ள Nashville நகரத்திலே வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nashville நகரின் தலைமை பொலிஸ் அதிகாரி John Drake தெரிவிக்கையில் நகரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் ஒரு கேளிக்கை வாகனத்தை கண்டுபிடித்தனர்.

குண்ட வெடிப்பதற்கு முன்னர், 15 நிமிடங்களுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறி பதிவு செய்யப்பட்ட ஆடியோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என Drake கூறினார்.

கேளிக்கை வாகனம் வெடித்து சிதறியதில் அப்பகுதியிலிருந்து வீடுகள் சேதமடைந்ததில் 3 பேர் காயமடைந்தனர்

இந்நிலையில், குண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல்பாகங்களாக என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை தொடர்ந்து நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து FBI மற்றும் Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosive இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன

No comments

Powered by Blogger.