Header Ads

கொரோனா வைத்தியசாலையில் பாரிய தீவிபத்து! 7 பேர் பலி

 


எகிப்திய தலைநகர் கெய்ரோவின் புறநகரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் 7 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கெய்ரோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 கி.மீ (19 மைல்) தொலைவில் உள்ள எல் ஒபூரில் உள்ள மிஸ்ர் அல் அமல் மருத்துவமனையில் காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் ஆரம்ப விசாரணைகளின்படி மின்சாரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக, பாதுகாப்பு பணியாளர்களும் மற்றும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, நோயாளிகள் கெய்ரோவில் உள்ள ஒரு பொது மருத்துவமனைக்கு சிகிசைக்காக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.