Header Ads

🔴 இன்று முதல் உள்ளிருப்பில் சில தளர்வுகள்!!

 



இன்று சனிக்கிழமை முதல் உள்ளிருப்பில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பொது முடக்கம் தொடர்பான அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார். அதில் மூன்று பகுதியாக உள்ளிருப்பு தளர்த்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மக்ரோன் குறிப்பிட்ட முதல்கட்ட தளர்வு இன்று நவம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை நடைமுறைக்கு வருகின்றது.

அதன்படி, இதுவரை ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை மாத்திரமே வெளியில் பயணிக்கக்கூடியதாக இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, தற்போது அது 20 கிலோ மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மணிநேரம் மாத்திரமே வெளியில் நேரத்தை செலவிடலாம் என இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அது 3 மணிநேரங்களாக அதிகரிக்கப்படுகின்றது. பயணச்சான்றிதழ் (அனுமதி பத்திரம்) தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.