Header Ads

பழைய மாணவர்களை ஒன்றுபடுத்தும் கல்முனை சாஹிராவி ன் மாபெரும் நடைபவனி




கல்முனை சாஹிராக் கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00மணிமுதல் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சாஹிராவின் வரலாற்றில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் விழிப்புணர்வு நடைபவனிகல்லூரியில் இருந்துகாலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி சாய்ந்தமருது கல்யாண வீதி ஊடாக  மாளிகைக்காடு சந்திவரை சென்று பின்பு அங்கிருந்து பிரதான வழிஊடாக கல்முனை சுற்றுவரை சென்று பிறகு அங்கிருந்து கல்முனை சாஹிராக் கல்லூரியை வந்தடையும்.

கல்லூரியின் அதிபர் எம்எஸ்முஹம்மத் அயராத முயற்சி செய்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில்பிரதியமைச்சர் எச்எம்எம்ஹரீஸ்உட்பட இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பைவழங்கவிருப்பதாக கல்லூரியின் அதிபர் எம்எஸ்முஹம்மத் எமக்குத் தெரிவித்தார்.

மனக் கசப்பு மற்றும் வெறுப்புகளை மறந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றை வரை கல்வி கற்றகற்றுக் கொண்டிருக்கின்றமாணவர்கள்முன்னாள் அதிபர்கள்முன்னாள் - இந்நாள் ஆசிரியர்கள்,  கல்விசாரா ஊழியர்கள்பாடசாலை அபிவிருத்திச் சங்கஉறுப்பினர்கள்ஊர்ப்பிரமுகர்கள்வர்த்தகப்பிரமுகர்கள்உலமாக்கள் என பலதரப்பட்டோரும் இந்நிகழ்வில் தவறாது இணைந்துகொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வினூடாக பழைய மாணவர்களை ஒன்றுபடுத்தல்பாடசாலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்பழைய மாணவர்களைக்கொண்டு பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளைப் பெறல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்தவே இந்நடைபவனிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடட் குழுவினர்பக்கவாத்தியக் குழுவினர்சாரணியர்பொல்லடிபாவா ரபான் குழுவினர் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இந்நடைபவனியில்இடம்பெறவுள்ளது.

இம்முறை .பொ. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் இந்நிகழ்வில் விஷேடமாக இணைந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வுக்காக T  -  சேட் அச்சிடப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அதற்கான விற்பனையும் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.