Header Ads

தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - ஹரீஸ்

தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் இரு தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சம்பவத்தை முஸ்லிம் இனத்திற்கெதிரான வன்முறையாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்பிரதேசத்தில் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். 

தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் நேற்று (04) இரவு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில் வீதிப் போக்குவரத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்குதலுக்குள்ளான பெரும்பான்மை சகோதரர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அதனை பேரினவாத சக்திகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையினை அப்பிரதேசத்தில் தோற்றுவித்துள்ளதாகவும் அறிகின்றேன். இவ்வாறு தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஒரு சமூகத்திற்கெதிரான வன்முறையாக மாறுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஆரோக்கியமான விடயமன்று. 

No comments

Powered by Blogger.