Header Ads

தேவாலயத்தின் மேற்கூரை உடைந்து வீழ்ந்தது: பலர் பலி


மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரையே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.

மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது அந்த தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களில் பல சிறார்களும் உள்ளடங்குகின்றனர். 

அத்துடன். அங்கு தொடந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த பகுதியில் அவசர தேவைகள் தாமதமாக இடம்பெற்று வருகின்றன என மெக்சிக்கோ தகவல்கள் தெரிவிக்கின்றன. 



No comments

Powered by Blogger.