Header Ads

மயிலத்தமடு போராட்டம்: காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் மீது தாக்குதல்!


மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கல்லடியில் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் பயணமாக நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், நேற்று பெருமளவான மக்களின் பங்களிப்புடன் போராட்டம் ஆரம்பமாகிய நிலையில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

 உள்நாட்டில் இன மத ரீதியான பக்கச்சார்புடனுடம் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் செயற்படுவதுடன் நில ஆக்கிரமிப்பு பௌத்த மயமாக்கத்தில் ஈடுபடுகின்றீர்கள் , ஈஸ்டர் தாக்குதலுக்கு நம்பிக்கையான விசாரணை இல்லை, சிறுவர்களும் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளார்கள்.

ஆகவே எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை தாங்கி இருந்தனர். 



No comments

Powered by Blogger.