Header Ads

தம்புள்ளை விபத்தில் பருத்துத்துறை பெண் பொலிஸ் பலி!


தம்புள்ளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகன விபத்தில் பருத்துத்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க (வயது- 24) என்பவராவார்.

 அவர் நேற்று செவ்வாய்க்கிழமை(10) முற்பகல் 11.00 மணியளவில் கலேவல

 தலகிரியாகம பன்சாலைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பெண் பொலிசார் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டது.

 இதில் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார்.

 மேற்படி பெண் பொலிசார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(09) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுமுறைக்காக வீடு திரும்பியதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.