Header Ads

கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை வெளியேற்றும் இந்தியா!


கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போகிறது என  தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தவறினால் அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மொத்தம் 62 கனடா அதிகாரிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கையை 41ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது என மீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.

இந்த நிலையில், தற்போது 40 கனட அதிகாரிகளை இந்தியா வெளியேற்ற உள்ளது என தகவல் வெளியாகியமை மேலும் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அரசு இதுகுறித்து தற்போது வரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  



No comments

Powered by Blogger.