Header Ads

ஜோர்தான் - இஸ்ரேல் எல்லையில் 2 இலங்கை பெண்கள் கடத்தல்: இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தகவல்


ஜோர்தான் - இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இலங்கை பெண்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர் என  இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த இருவர் பற்றிய தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக காணாமல் போன 2 இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காசாவில் வசிக்கும் இலங்கையர்களை எகிப்தின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, எகிப்து தூதரகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றது.  



No comments

Powered by Blogger.