Header Ads

இஸ்ரேலில் இருந்து இதுவரை 147 பேர் தமிழகம் திரும்பினார்


இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் என மொத்தமாக 147 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது. அதன் அடிப்படையில் , இதுவரை நான்கு கட்டங்களாக புது டெல்லி வந்த 98 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து 'ஒபரேஷன் அஜய்' முலம் புதுடில்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழக அரசினால் வரவேற்கப்பட்டனர்.

இஸ்ரேலில் இருந்து 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.