Header Ads

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உயிரிழப்பு!


மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 உந்துருளியில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மகளான 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  



No comments

Powered by Blogger.