Header Ads

பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில், 50 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கு மதம் சார்ந்த கூட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.