Header Ads

மணிப்பூரில் தொடரும் கலவரம்: இதுவரை 175 பேர் படுகொலை!


மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்து 108 பேர் காயமடைந்துள்ளனர் என  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும், இந்த கலவரத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

4 ஆயிரத்து 786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன எனவும்  386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் பொலியார் குறிப்பிட்டுள்ளனர். 

காணாமற்போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான  15,050 வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளன எனவும் 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.