Header Ads

10 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தையை தேடும் பொலிஸ்


கண்டி மாவத்தேகம பகுதியில் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். 

இந்த சந்தேகநபர் கண்டி மாவத்தேகம பகுதியில் 09 வயது தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

சம்பவம் தொடர்பில்  தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில், சந்தேகநபர் அந்த பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

942913940v என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்குரிய 29 வயதுடைய கிஹான் தனுஷ்க்க என்பவரே சந்தேக நபராவார்.

 இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 


No comments

Powered by Blogger.